குவாந்தான், ஆகஸ்ட் 3 :
RM59,000 மதிப்புள்ள மானிய விலை டீசலை முறைகேடாகப் பயன்படுத்தியதாக, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் (KPDNHEP) பகாங் கிளையினர் இருவரைக் கைது செய்துள்ளனர்.
பகாங் KPDNHEP இயக்குநர் டத்தோ மார்க் உஜின் கூறுகையில், 51 மற்றும் 21 வயதுடைய இரு ஆண்கள், நேற்று காலை சுமார் 9.30 மணியளவில் இந்தேரா மஹ்கோட்டாவில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், 7 டன் எடையுள்ள லோரியில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட பெட்டிகளில் டீசல் நிரப்பிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
“சட்டவிரோதமாக கட்டப்பட்ட எட்டு தொட்டிகளுக்கு டீசலை மாற்றப் பயன்படுத்தப்பட்ட தோம்புகள், ஒவ்வொன்றும் 1,000 லிட்டர்களை சேமிக்கும் திறன் கொண்டவை, அவர்கள் கைது செய்யப்பட்ட போது, ஏழு டாங்கிகளில் தலா 200 லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது.
“சந்தேக நபர்கள் தொட்டிகளை நிரப்ப நீண்ட நேரம் எடுக்கும் என்பதால், தாம் கண்காணிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நிலையத்தில் தொட்டிகளை நிரப்பவில்லை என்று நாங்கள் நம்புகிறோம். மாறாக அவர்கள் ஒவ்வொரு பெற்றோல் நிலையங்களுக்கும் சென்று நிரப்புகிறார்கள்,” என்று அவர் இன்று பகாங் KPDNHEP அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்களிடம் கூறினார்.
மானிய விலையில் வழங்கப்படும் டீசலை முறைகேடாக பயன்படுத்திய இந்தக் குழுவில் வேறு சந்தேக நபர்களும் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
விநியோக கட்டுப்பாடு சட்டம் 1961 இன் 21 மற்றும் 20(1) பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.