பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 12 :
15 ஆவது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2018 இல் நடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றி பெற்ற பின்னர், அம்னோவில் இருந்து அந்த ஆறு பேரும் விலகியதாக ஒரு மலாய் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தசெக் கெலுகோர் எம்பி டத்தோ ஷாபுடின் யஹாயா, சுங்கை பெசார் எம்பி டத்தோ முஸ்லிமின் யஹ்யாம், கூடாத் எம்பி டத்தோ அப்துல் ரஹீம் பாக்கி, சபாக் பெர்னாம் எம்பி டத்தோ பாசியா ஃபகே, பியூஃபோர்ட் எம்பி டத்தோஸ்ரீ அசிசா டன் மற்றும் புக்கிட் ஹுஸ்ஃபி சந்தியாங் எம்.பி அப்துல் பைசல் ஆகியோர் அடங்குவர் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.