கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பில் மோதியதில், ஒருவர் பலி- இருவர் படுகாயம்

சுக்காய், ஆகஸ்ட் 12 :

இன்று காலை, கிஜால் டோல் பிளாசா அருகே லேபு ராயா பந்தாய் தீமூர் 2 (LPT 2) நெடுஞ்சாலையின் 301.9 ஆவது கிலோமீட்டரில், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

அதிகாலை 5.40 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், தலையில் பலத்த காயம் அடைந்த சஹாருஜாமான் அப்துல் வஹாப் (48) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது இரு நண்பர்களான கமாருல்ஜமான் அபுபக்கர், 52, மற்றும் முகமட் அஃபிக் முகமட் நூர், 23, ஆகியோர் பலத்த காயமடைந்து, மேலதிக சிகிச்சைக்காக கெமாமன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கெமாமன் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஹன்யான் ரம்லான் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் மெக்கானிக்காக பணிபுரிந்தார், மேலும் அவரது இரண்டு நண்பர்கள் ஓட்டுநர்களாக பணிபுரிந்தனர்.

அவரது கூற்றுப்படி, சம்பவத்தின் போது, ​​பாதிக்கப்பட்ட அனைவரும் ஜோகூரில் இருந்து கோல திரெங்கானுவுக்கு பயணித்ததாக கூறப்படுகிறது.

“சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தவுடன், பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற பெரோடுவா ஆக்ஸியா கார், கட்டுப்பாட்டை இழந்து, உலோக சாலைத் தடுப்பில் மோதியதாக நம்பப்படுகிறது.

“அதே நேரத்தில், அதே திசையில் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் 39 வயதுடைய ஒருவர் ஓட்டிவந்த நான்கு சக்கர வாகனம் பாதிக்கப்பட்டவரின் காரை மோதியது,” என்று அவர் கூறினார்.

மோதியதால் ஆக்ஸியா காரில் இருந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர் என்று ஹன்யான் கூறினார்.

“இரண்டு பயணிகளுடன் பயணஞ்செய்த நான்கு சக்கர வாகன ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

அவர் கூறுகையில், சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here