கோழி இறைச்சி ஏற்றுமதி மீதான தடையை நீக்குவது குறித்து அரசு ஆய்வு செய்கிறது – பிரதமர்

செர்டாங், ஆகஸ்ட் 13 :

கோழி இறைச்சி ஏற்றுமதி மீதான தடையை நீக்கும் திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

கோழி வளர்ப்பாளர்களிடமிருந்து இத் தடையை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு விண்ணப்பம் கிடைத்துள்ளதாக பிரதமர் கூறினார்.

“உள்ளூர் விநியோகத்தைப் பாதிக்காமல் ஏற்றுமதியை அனுமதிக்க முடியும் என்று உறுதிப்படுத்த முடிந்தால், அதை மதிப்பாய்வு செய்வது பற்றி நாங்கள் பரிசீலிக்கலாம்.

மேலும் இது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது என்றும் வேளாண்மை மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சர், டத்தோஸ்ரீ டாக்டர் ரொனால்ட் கியாண்டி செப்டம்பர் மாதத்திற்கான கோழி உற்பத்தி குறித்த விவரங்களை வழங்குவார் என்றும் அவர் கூறினார்.

இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 13) செர்டாங்கில் நடந்த மலேசிய விவசாயம், தோட்டக்கலை மற்றும் வேளாண்மை சுற்றுலா கண்காட்சி 2022 ஐ பார்வையிட்ட பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here