விபத்துக்குள்ளான வாகனம் தீப்பிடித்ததில் அதற்குள் சிக்கிக்கொண்ட ஓட்டுநர் உடல் கருகி பலி

கோப்புப்படம்

பத்து பஹாட், செப்டம்பர் 17 :

நேற்றிரவு இங்குள்ள கிலோமீட்டர் 10 ஜாலான் புக்கிட் பாசீர் – தோங்காங் பெச்சா என்ற இடத்தில் ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனம் விபத்துக்குள்ளாகி, உடனேயே தீப்பிடித்ததில், அதில் சிக்கி கொண்ட ஓட்டுநர் உடல் கருகி இறந்தார்.

இந்த சம்பவம் இரவு 11.10 மணியளவில் நடந்ததாக பத்து பஹாட் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் இஸ்மாயில் டோல்லா கூறினார்.

பத்து பஹாட் நகர் திசையிலிருந்து யோங் பெங்கிற்கு பலியானவர் ஓட்டிச் சென்ற ரேஞ்ச் ரோவர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது பக்கம் சறுக்கி கற்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

“விபத்தின் விளைவாக, வாகனம் தீப்பிடித்தது, இதனால் 43 வயது ஓட்டுநர் சிக்கிக்கொண்டு உயிரிழந்தார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முறையே 27 மற்றும் 25 வயதுடைய மற்றய இரு பயணிகளுக்கு பலத்த காயமடைந்துள்ளனர் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக பத்து பஹாட், சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்கு (HSNI) அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்,” என்று அவர் கூறினார்.

மேலும் ,இவ்வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் (APJ) 1987 இன் கீழ் விசாரிக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here