கோத்தா பாரு, செப்டம்பர் 21 :
சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபட்டதாக கிளாந்தான் காவல்துறையால் கைது செய்யப்பட்ட 50 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் மொத்தம் 25 பேர் பள்ளி மாணவர்கள் என்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
ஜூன் முதல் கடந்த ஆகஸ்ட் வரை மூன்று மாதங்கள் நீடித்த தெருக் குண்டர்களை ஒழிப்பதற்கான சிறப்புப் பணியின்போது, அவர்கள் கைது செய்யப்பட்டதாக கிளாந்தான் காவல்துறையின் பதில் தலைவர், டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 இன் பிரிவு 42 இன் கீழ் அனைத்து ஓட்டுநர்களும் விசாரிக்கப்பட்டதாகவும், அதே சட்டத்தின் பிரிவு 60 இன் கீழ் 84 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“இளைஞர்களிடையே வாகனம் ஓட்டுவதை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், மேலும் இது அவர்களின் உயிருக்கு மட்டுமல்ல, பிற சாலைப் பயணிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும். எனவே இந்த செயல்பாட்டைக் கட்டுப்படுத்த அவ்வப்போது நடவடிக்கைகள் காவல்துறையால் இவ்வாறான சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
“பிள்ளைகளை, குறிப்பாக சிறார்களைக் கட்டுப்படுத்துவதில் பெற்றோர்களும் சம பங்கு வகிக்க வேண்டும், இதனால் அவர்கள் சட்டவிரோத பந்தயங்களில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள், இதன் மூலம் அந்தக் குழுவில் ஏற்படும் அபாயகரமான விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
இவ்வாறான வழக்குகளில் “குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும், RM5,000க்கு குறையாத RM15,000க்கு மிகாமல் அபராதமும் விதிக்கப்படலாம்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கூறப்பட்ட ஜூன் முதல் கடந்த ஆகஸ்ட் வரை, இதே காலகட்டத்தில் 1,101 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 36 கார்கள் உட்பட 1,462 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.
அதில், பல்வேறு குற்றங்களுக்காக 1,488 சம்மன்கள் விதிக்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.