இரண்டு முன்னாள் பிகேஆர் (PKR) நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்ட்டி பாங்சா மலேசியாவில் (PBM) இணைந்தனர். அவர்கள் கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் மற்றும் செகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் சாந்தரா குமார்.
பிபிஎம்மின் முதல் ஆண்டு பொதுக் கூட்டத்திற்குப் பிறகு இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த விஷயத்தை செயல் தலைவர் ஸூரைடா கமாருடின் அறிவித்தார்.