மானிய விலை டீசலை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் 9 பேர் கைது

ஜோகூர் பாருவில்  17,444 லிட்டர் மானிய விலை டீசலை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 5 மணி முதல் இன்று அதிகாலை 2.15 மணி வரை Op Kontraban இல் நடத்தப்பட்ட மூன்று சோதனைகளில் 20 முதல் 41 வயதுடைய எட்டு உள்ளூர்வாசிகள் மற்றும் ஒரு வெளிநாட்டவர் அடங்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமத் தெரிவித்தார்.

முதல் சோதனையானது ஸ்கூடாயில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திலும், இரண்டாவது உலு திராமில் உள்ள ஒரு கடையிலும், மூன்றாவது சோதனை பாசீர் கூடாங்கில் உள்ள தொழிற்துறை பகுதியிலும் நடந்தது.

இந்த சோதனையின் போது, RM48,494 மதிப்புள்ள டீசல், நான்கு லோரிகள், ஒரு வேன், 6 எண்ணெய் தொட்டிகள் மற்றும் மூன்று பிளாஸ்டிக் இடைநிலை மொத்த கொள்கலன்கள் (IBC) ஆகியவை என மொத்த மதிப்பு RM281,494 ஆகும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் நடவடிக்கைக்காக உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக கமருல் ஜமான் கூறினார். சப்ளை கட்டுப்பாடு சட்டம் 1961 பிரிவு 21ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here