ஜோகூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 295 பேர், 4 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

ஜோகூர் பாரு, அக்டோபர் 3 :

இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஜோகூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 295 பேர் 4 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, 72 குடும்பங்களைச் சேர்ந்த 245 பேராக இருந்த எண்ணிக்கை இன்று காலையில் அதிகரித்து காணப்பட்டது.

ஜோகூரின் கூலாய் மாவட்டமே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது, அங்கு 41 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் SMK புக்கிட் பத்துவில் உள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து குளுவாங் மாவட்டமும் அதற்கு அடுத்த நிலையில் பொந்தியானும் இதுவரை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here