சிகாம்புட் எரிப்பொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பிடித்த எரிவாயு நிரப்பி

கோலாலம்பூர், அக்டோபர் 3 :

இங்குள்ள சிகாம்புட்டில் உள்ள எரிப்பொருள் நிரப்பு நிலையத்தின் எரிவாயு நிரப்பி தீப்பிடித்ததை அடுத்து, நேற்று  அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

கோலாலம்பூரில் உள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காலை 10.33 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது.

“ஸ்ரீ ஹர்தாமாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு இயந்திரத்துடன் மொத்தம் ஏழு உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.

“அப்போது நிசான் செரீனா எம்பிவி பெட்ரோல் நிலையத்தில் இருந்ததாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, அப்போது எரிவாயு நிரப்பி தானாகவே தீப்பிடித்தது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீயை அணைக்கும் கருவிகளை பயன்படுத்தி பொதுமக்கள் தீயை வெற்றிகரமாக அணைத்ததாக அவர் கூறினார்.

“இந்தச் சம்பவத்தால் வாகனத்தின் ஐந்து விழுக்காடு எரிந்தது.

“எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here