கிணற்றுக்குள் விழுந்த முதியவர் தீயணைப்பு வீரர்களால் பாதுகாப்பாக மீட்பு

நீலாய், அக்டோபர் 7 :

இன்று கம்போங் பத்து 8, மந்தினில், 2.4 மீட்டர் ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்த முதியவரை தீயணைப்பு வீரர்களால் பாதுகாப்பாக மீட்டனர்.

நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,சம்பவம் தொடர்பில் காலை 8.29 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மந்தின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஐந்து உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர், அங்கு கிணற்றுக்குள் சிக்கிக்கொண்ட 60 வயதான முதியவரைக் கண்டனர்.

உடனே ஏணியைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவரை கிணற்றிலிருந்து வெளியே மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, சுகாதாரக் குழுவிடம் ஒப்படைத்தனர்,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவருக்கு மலாய் மொழி சரளமாக பேச முடியாததால், முதியவர் எவ்வாறு கிணற்றுக்குள் வீழ்ந்தார் அல்லது வீழ்ந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here