பண்டார் கின்ராராவிலுள்ள மசூதிக்கு அருகே கார் திடீரென தீப்பிடித்ததில், ஓட்டுநர் உடல் கருகி மரணம்

கோப்புப்படம்

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 11 :

இங்கு அருகே உள்ள ஜாலான் BK 5/1 பண்டார் கின்ராராவில் உள்ள மசூதிக்கு அருகே, நேற்று ஒருவர் ஓட்டிச் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அவர் உடல் கருகி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக இரவு 10.35 மணியளவில் தீயணைப்பு வீரர்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் இயக்குநர் நோராஸாம் காமிஸ் தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும் பூச்சோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து இரண்டு இயந்திரங்களுடன் எட்டு உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

“நாங்கள் வந்தவுடன், அந்த இடத்தில் ஒரு பெரோடுவா கான்சில் கார் முற்றிலும் எரிந்திருந்ததைக் கண்டோம்.

அப்போது “ஓட்டுநரின் பக்கத்தில் இருந்த ஒருவர், சரிந்து மயங்கிய நிலையில் காணப்பட்டார், பின்னர் அங்கிருந்த சுகாதார பணியாளர்கள் அவர் இறந்து விட்டார் என்று அறிவித்தனர்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here