கூடாட், அக்டோபர் 13 :
4,624 மானிய விலை சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை கடத்த முயன்றதாக நம்பப்படும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஐவர் சபா பிராந்திய கடல்சார் போலீஸ் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில், கோலா சுங்கை சஹாபாட் தேசா கென்கானா கடற்கரைப் பகுதியில் லாஹாட் டத்து பிராந்தியம் நான்கின் கடல்சார் போலீஸ் உறுப்பினர்களால் ஒரு குடிசையில் நடத்தப்பட்ட சோதனையில், 20 முதல் 40 வயதுக்குட்பட்ட எந்த அடையாள ஆவணங்களும் இல்லாத ஐந்து பிலிப்பைன்ஸ் நாட்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து பிலிப்பைன்ஸுக்கு கடத்த முயன்றதாகக் கருதப்படும் மானிய விலையில் தயாரிக்கப்பட்ட 4,624 சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பொருளின் மதிப்பு RM11,560 என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேல் நடவடிக்கைக்காக KPDNHEP லஹாட் டத்து கிளையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சபா பிராந்தியத்தின் நான்காவது பிபிஎம் கமாண்டர், துணை ஆணையர் அஹ்மட் ஆரிஃபினை தொடர்பு கொண்டபோது, அவர் இச்சம்பவத்தில் ஐவர் கைது செய்யப்பட்டதையும், அவர்களிடமிருந்து சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டதையும் உறுதிப்படுத்தினார்.







