ஜோகூரில் ஜனவரி 1 முதல் நேற்று வரை மொத்தம் 195 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது

ஜோகூர் பாரு, அக்டோபர் 14 :

ஜோகூர் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (JSJN) நடத்திய OP Tapis Khas சிறப்புக் கண்காணிப்பு நடவடிக்கையின் விளைவாக, ஜனவரி 1 முதல் நேற்று வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 195 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் காவல்துறையினரால் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டனர் என்று ஜோகூர் காவல்துறைத் தலைவர், டத்தோ கமருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கைதுசெய்யப்பட்ட 136 பேருடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை இந்தாண்டு 43.38 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஆபத்தான மருந்துகள் சட்டம் (ADB) (சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்) 1985 இன் பிரிவு 3(1) இன் படி அனைவரும் கைது செய்யப்பட்டதுடன் அதன் பின்னர் அவர்கள் புனர்வாழ்வு மையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு தடுப்பு உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

“இந்த நடவடிக்கை மூலம் போதைப்பொருள் விற்பனையாளர்களையும் போதைக்கு அடிமையானவர்களையும் சமூகத்திலிருந்து ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றுக்கொடுப்பதன் மூலம் போதைப்பொருள் பாவனை நடவடிக்கைகளை சமூகத்திலிருந்து குறைக்க அல்லது அகற்ற முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.

அதே காலகட்டத்தில், மொத்தம் 23,973 பேர் பரிசோதிக்கப்பட்டதாகவும், அதில் மொத்தம் 11,472 பேர் பல்வேறு போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டதாகவும் கமாருல் ஜமான் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் 13 முதல் 70 வயதுக்குட்பட்ட 10,692 ஆண்கள் மற்றும் 780 பெண்கள் உள்ளனர். மேலும் அதில் போதைப்பொருள் விநியோகிஸ்தர்கள் 2,240 பேரும், போதைப்பொருள் வைத்திருந்ததற்காக 3,912 பேரும், போதைக்கு அடிமையானவர்கள் 5,320 பேரும் அடங்குவர்.

அத்தோடு கைது செய்யப்பட்டவர்களில் மொத்தம் 796 பேருக்கு எதிராக, ADB 1952 இன் பிரிவு 39C இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here