பெசூட், அக்டோபர் 20 :
நேற்று, புதன்கிழமை (அக்டோபர் 19) கனமழையுடன் கூடிய புயலினால் இங்குள்ள ஏழு கிராமங்களில் உள்ள 60க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன என்று கோலா பெசூட் மாநிலத் தொகுதி ஒருங்கிணைப்பு அதிகாரி அஸ்பி சாலே தெரிவித்தார்.
இந்தப் புயலால் பல வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நீடித்த கனமழையுடன் கூடிய புயல் வானிலை நிலவியதாகவும் அவர் கூறினார்.
“பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களைச் சேகரிக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம், ஏனெனில் சில பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த கிராம அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புக் குழுக்களிடம் (JPKK) அறிக்கை தாக்கல் செய்யவில்லை,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், SK புக்கிட் புத்திரியில், புயலின் போது கூரைகள் சேதமடைந்ததால் பள்ளியின் நான்கு வகுப்புகள் அழிக்கப்பட்டன. எனினும், பள்ளி நேரம் முடிந்ததும் புயல் வீசியதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பெசூட் கல்வி துணைத் தலைமை அதிகாரி ஹம்டான் அப்துல் கஃபர் கூறினார்.
“பள்ளி இன்று வழக்கம் போல் இயங்குகிறது, ஆனால் பாதிக்கப்பட்ட வகுப்புகளுக்கான பாடங்கள் தற்போதைக்கு பள்ளியின் கேட்போர் கூடத்தில் நடத்தப்படும்,” என்றும் அவர் கூறினார்.