லோரியின் டயர் திடீரென வெடித்ததில், அருகில் வந்த காரில் மோதி விபத்து; பெண் படுகாயம்

கிள்ளான், அக்டோபர் 22 :

இங்குள்ள ஜாலான் சுங்கை பினாங்கில் நேற்று லோரியின் டயர் வெடித்ததில், அருகே வந்த காரில் கண்டெய்னர் லோரி மோதியதில், கார் ஓட்டுநரான பெண் படுகாயமடைந்தார்.

நன்பகல் 12.40 மணியளவில் நடந்த சம்பவத்தில் 36 வயதுடைய பெண்ணின் இடது கை உடைந்து, தோளில் வெடிப்பு ஏற்பட்டது.

தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் சா ஹூங் ஃபோங் கூறுகையில், சம்பவத்தின் போது, ​​ஆடவர் ஓட்டிச் சென்ற லோரி வெஸ்ட்போர்ட் திசையிலிருந்து அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள தொழிற்சாலையை நோக்கி வந்து கொண்டிருந்தது.

“லோரியின் இடதுபுறம் திரும்ப முயன்றபோது, ​​லோரியின் முன்பக்க வலதுபுற டயர் திடீரென வெடித்ததாகக் கூறப்படுகிறது.

“இந்தச் சூழ்நிலை காரணமாக லோரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி, பாதிக்கப்பட்டவரின் காரை மோதியது, இதனால் காரின் மேற்கூரை மற்றும் முன்பக்க பானட் நசுங்கியது ” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மேலதிக சிகிச்சைக்காக கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு (HTAR) அனுப்பப்பட்டார்.

தற்போது அவரின் உடல்நிலை தெரிவருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ஹூங் ஃபோங் மேலும் கூறுகையில், சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 43 (1) இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here