ஆற்றைக் கடக்கும்போது மியன்மார் சட்டவிரோத குடியேறிகள் 14 பேர் கைது

புக்கிட் காயு ஈத்தாம், அக்டோபர் 26 :

மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ள ஃபெல்டா புக்கிட் தாங்காவில் ஆற்றைக் கடக்கும்போது, ​​மியன்மாரில் இருந்து நாட்டிற்குள் வந்த 14 சட்டவிரோத குடியேறிகளை மலேசிய ஆயுதப்படை நேற்று கைது செய்தது.

மலேசிய காலாட்படையின் இரண்டாவது பிரிவின் தலைமையகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், சம்பந்தப்பட்ட அனைத்து சட்டவிரோத குடியேறிகளும் ஒப் பெந்தேங் செக்டரில் ஆற்று வழித்தடத்தில் எல்லையை கடக்கும்போது காலை 10.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

“மலேசியா-தாய்லாந்து எல்லைப் பகுதியில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வரும் ரோந்துக் குழு, ஃபெல்டா புக்கிட் தாங்கா பகுதியைச் சுற்றியுள்ள ஆற்றுப் பாதைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் பொதுமக்கள் குழுவின் நடமாட்டத்தைக் கண்டறிந்துள்ளனர்.

“அப்போது பணியில் இருந்த உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட 14 போரையும் ம் கண்டுபிடித்து கைது செய்தனர், அவர்கள் அனைவரும் மியன்மார் நாட்டுப் பிரஜைகள் என்றும் அவர்களிடம் எந்த செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லை, அத்தோடு அனைவரும் 18 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.

கைது செய்யப்பட்ட 12 ஆண்கள் மற்றும் இரு பெண்களும் அடுத்த நடவடிக்கைக்காக புக்கிட் காயு ஈத்தாம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here