குவாந்தான், அக்டோபர் 30 :
பகாங்கில் உள்ள மலேசிய குடும்ப அபிலாசைகள் (AKM) சுற்றுப்பயணத்திற்கு வருகை தருப்பவர்கள், பகாங் சுகாதாரத் துறை வழங்கும் இலவச சுகாதாரப் பரிசோதனைச் சேவைகளைப் பெறும் வாய்ப்புள்ளது.
JKNP இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் அசிமி யூனுஸ் கூறுகையில், வெள்ளிக்கிழமை முதல் இன்று நண்பகல் வரை, SASICC மற்றும் தாருல் மக்மூர் ஸ்டேடியத்தில் உள்ள தற்காலிக சுகாதாரச் சேவை நிலையத்திற்கு 3,000 பார்வையாளர்களின் வருகைப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.
தரவுகளின் எண்ணிக்கை அடிப்படையில், சுமார் 1,000 பார்வையாளர்கள் இரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை பரிசோதித்தனர். மீதமுள்ளவர்கள் பல் பரிசோதனை செய்துகொண்டனர் என்றார்.
“எங்களிடம் ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும் மருந்தக ஆலோசனைகள் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் போன்றவையும் உள்ளது,” என்றும், சுகாதார நிலையம் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், 46 வயதான அரசு ஊழியர் Faez Nazhan,பாகங், கூறும்போது, வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்வது தனது பழக்கம் என்றும், இந்த பரிசோதனைக்காக தான் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை என்பதால் இன்று அதைச் செய்வதற்கான வாய்ப்பைப் தான் பயன்படுத்தியதாகவும் கூறினார்.
“நோய்களைத் தடுக்க முதலில் நமது உடல்நிலையை அறிந்துகொள்வது முக்கியம், இப்போது எனது கொலஸ்ட்ரால் அளவு நன்றாக இல்லை,” என்று அவர் இங்குள்ள சுல்தான் அஹ்மஷா சர்வதேச மாநாட்டு மையத்தில் (SASICC) சந்தித்தபோது கூறினார்.