கோலா சிலாங்கூர், நவம்பர் 4 :
பெக்கான் லாமா, கோலா சிலாங்கூர் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சந்திப்புக்கு அருகில் உள்ள ஜாலான் கிள்ளான் தெலுக் இன்டானின் 47வது கிலோமீட்டரில், அவர் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து லோரி மீது மோதியதில், தாதி ஒருவர் உயிரிழந்தார்.
இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 25 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று கோலா சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ராம்லி காசா தெரிவித்தார்.
இந்த விபத்தில் பெரோடுவா மைவி மற்றும் இசுஸு லோரி ஆகிய இரு வாகனங்கள் மோதின.
அவரது கூற்றுப்படி, ஒரு தனியார் மருத்துவமனையில் தாதியாக பணியாற்றி வரும் பாதிக்கப்பட்ட பெண், வேலைக்காக சபாக் பெர்னாமில் உள்ள தனது வீட்டிலிருந்து ஷா ஆலாத்திற்குச் சென்று கொண்டிருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.
“ஒரு வளைவு சாலை வழியாக செல்லும்போது, பாதிக்கப்பட்டவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்ப்பாதையில் நுழைந்து லோரி மீது மோதியது.
“விபத்தின் விளைவாக, பாதிக்கப்பட்டவர் பலத்த காயங்களுக்கு ஆளானார் மற்றும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கான காரணம் இன்னும் விசாரனையில் உள்ளதாகவும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 இன் பிரிவு 41 (1) இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ராம்லி கூறினார்.