15ஆவது பொதுத் தேர்தல் (ஜிஇ) வேட்புமனுத் தாக்கல் அமர்வின் போது மொத்தம் 1,386 வேட்பாளர் வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்திடம் (இசி) பெறப்பட்டன. தேர்தல் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்கு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான 6 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்றார்.
நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 945 வேட்பு மனுக்களும், சட்டமன்ற தொகுதிகளுக்கு 434 வேட்பு மனுக்களும், புகாயா இடைத்தேர்தலுக்கு 7 வேட்பு மனுக்களும் பெறப்பட்டன.
பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் 50 முதல் 59 வயதுடையவர்கள், மொத்தம் 443 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் (352), 40 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் (350)பேர். நாடாளுமன்றத் தொகுதிகளில் 82 இடங்களில் நான்கு முனைப் போட்டிகளும் அதே சமயம் சட்டமன்ற தொகுதிகளில் 51 இடங்களில் முக்கோணப் போட்டிகளும் உள்ளன என்று அவர் கூறினார்.
வேட்பாளர்களின் பிரச்சார நடவடிக்கைகளை கண்காணிக்க 625 தேர்தல் பிரச்சார அமலாக்க குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளதாக அப்துல் கனி கூறினார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அதிகாரப்பூர்வ பிரச்சார காலம் நவம்பர் 18, 2022 இரவு 11.59 மணி வரை தொடரும்.
தவறான விருப்பம், அதிருப்தி அல்லது இனரீதியான அல்லது மத உணர்வுகளைத் தூண்டும் அல்லது தேசத்துரோகத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளைக் கொண்ட பிரச்சாரங்கள் அனுமதிக்கப்படாது என்று அவர் கூறினார்.
தேர்தல் பிரச்சாரம் இணக்கமாகவும், சட்டம் மற்றும் விதிமுறைகளின்படியும் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் நவம்பர் 19-ஆம் தேதியை வாக்குப்பதிவு நாளாகவும், நவம்பர் 15-ஆம் தேதியை முன்கூட்டியே வாக்களிக்கவும் நிர்ணயித்துள்ளது.