காட்டுப்பன்றி தாக்கியதில் ஆடவர் உயிரிழந்தார்

ஈப்போ: பந்தாய் ரெமிஸில் உள்ள ஜாலான் கம்போங் பாயா அராவில் காட்டுப்பன்றி தாக்கியதில் ஒருவர் இறந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் இறந்தவர், சைஃபுல் அனுவார் அப்துல் வஹாப் 46 என்றும், அவர் தனது பண்ணைக்குச் சென்று கொண்டிருந்தபோது காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டதாக கூறினார்.

49 மற்றும் 60 வயதுடைய மற்ற இரண்டு ஆண்கள், பாதிக்கப்பட்டவருக்கு உதவ முயன்றபோது லேசான காயம் அடைந்தனர்  என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே காட்டுப்பன்றி சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here