கோலாலம்பூர், நவம்பர் 9 :
15வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிபெற்றால் ஜாஹிட்டே அடுத்த பிரதமராவார் மாறாக பராமரிப்பு அரசாங்கத்தின் நடப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி உண்மையில் மீண்டும் பிரதமராவாரா? என்ற சந்தேகத்தை எழுப்பியதுடன், தேசிய முன்னணியின் வாக்குறுதி வெறுமனே வாக்குறுதியாகவே இருக்கும் என்று கூறி, டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோபுக்கு அனுதாபத்தை தெரிவிப்பதாகவும் துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று கூறினார்.
“பாவம் இஸ்மாயில் சப்ரி; BN வெற்றி பெற்றால் அவர் தொடர்ந்து பிரதமராக இருப்பார் என்று அவருக்கு உறுதியளிக்கப்பட்டது. பின்னர் அவர் பாராளுமன்றத்தை கலைத்தார். இப்போது அவரது கூட்டாளிகள் யாருமே இந்த தேர்தலில் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால் அவர் பலவீனமாகியுள்ளார்.
இஸ்மாயில் சப்ரி பிரதமராக வருவார் என்ற ஜாஹிட் ஹமிடியின் வாக்குறுதி வெற்று வாக்குறுதியாகவே இருக்கும் என்று பலர் நம்புகிறார்கள். இறுதியில் பிரதமராக இருப்பவர் ஜாஹிட் ஹமிடியே” GTA கூட்டணி தலைவரும் லங்காவி தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.