உலகின் மிகவும் மதிப்புமிக்க வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் எலான் மஸ்க். அவர் சமீபத்தில் சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார். 2018இல் எலான் மஸ்க் மீது டெஸ்லா பங்குதாரர் ரிச்சர்ட் ஜே. டோர்னெட்டா என்பவர் வழக்கு தொடர்ந்தார். ,
அது சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு நேரில் சென்ற எலான் மஸ்க் “நான் எந்த நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்க விரும்பவில்லை” என்றார். இதன்மூலம் எலான் மஸ்க் டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக எப்போதும் இருக்க விரும்பவில்லை என்று மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
இந்த வாரம் டுவிட்டரில் மறுசீரமைப்பு பணிகள் முடியும் என்றும் டுவிட்டருக்கான புதிய தலைமை செயல் அதிகாரியை நியமிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.