அனைத்து 15 தேர்தல்களிலும் வாக்களித்த 95 வயது மூதாட்டி கதிராயி பெருமாள்

1959ஆம் ஆண்டு முதல் தொடங்கிய நாட்டின் முதலாவது பொதுத் தேர்தலில் நான் வாக்களித்தது இன்னும் எனக்கு பசுமையாக இருப்பதாக கதிராயி பெருமாள் கூறினார்.

நான் மட்டுமல்லாது என் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் கொள்ளுப்பேரப் பிள்ளைகளும் தங்கள் ஜனநாயக் கடமையை நிறைவேற்றி உள்ளனர் என்றார் அவர்.

அவரின் புதல்வர் 68 வயது கங்கா ஆறுமுகம் கூறுகையில், இந்த 95 வயதிலும் மிக ஆர்வத்துடன் என் தாயார் வாக்களித்தது பெருமையாக இருப்பதாக சொன்னார்.

மேலும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் (வயது 66), இந்திரா தேவி (40), நித்தியாஶ்ரீ ஆகியோர் வாக்களித்தனர் என்று கங்கா ஆறுமுகம் கூறினார்.

– கு.இராமன்குட்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here