டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி மற்றும் அவரின் துணைவி ஆகியோர் SMK பண்டார் கெராயோங்கில் வாக்களித்தனர்

பெரா, நவம்பர் 19 :

தேசிய முன்னணியின் வேட்ப்பாளரான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், இன்று காலை 10.27 மணிக்கு இங்குள்ள SMK பண்டார் கெராயோங்கில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

பிரதமருடன் அவரது துணைவியான டத்தின்ஸ்ரீ முஹைனி ஜைனல் ஆபிதீன் மற்றும் சில குடும்ப உறுப்பினர்களும் அதே பள்ளியில் வாக்களித்தனர்.

பெரா நாடாளுமன்றத் தொகுதிக்கான தேசிய முன்னணியின் BN) வேட்பாளரும் காபந்து பிரதமருமான இஸ்மாயில் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நீலம் மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து காலை 9.20 மணியளவில் அந்த இடத்திற்கு வந்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here