கடந்த 24 மணி நேரத்தில் 5,745 கோவிட் -19 புதிய தொற்றுக்கள் பதிவு , 8,933 பேர் குணமடைந்தனர்

கோலாலம்பூர் :  கடந்த 24 மணி நேரத்தில் 5,745 கோவிட் -19 புதிய தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

இன்று 8,933 பேர் குணமடைந்திருப்பதாகவும், இதுவரை சிகிச்சையின் பின் குணமடைந்து வீடு திரும்பியவர்களது மொத்த எண்ணிக்கை 2,287,888 ஆக உள்ளதாகவும் சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

இதுவரை பதிவுசெய்யப்பட்ட கோவிட் -19  தொற்றுநோய்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 2,401,866 ஆக உள்ளது என்று அவர் கூறினார்.

தீவிர சிகிச்சை பிரிவில் 682 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவர்களில் 609 பேருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது மற்றும் 73 பேருக்கு கோவிட் -19 தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையில், 331 நோயாளிகளுக்கு சுவாசக்கருவியின் உதவி தேவைப்படுகிறது , அவர்களில் 280 பேருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது மற்றும் 51 பேருக்கு கோவிட் -19 தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இன்று தொற்றுக்குள்ளானவர்களில் 5,432 மலேசியர்கள் மற்றும் 301 வெளிநாட்டவர்கள் அடங்கிய 5,733 உள்ளூர் தொற்றுக்கள் இருந்தன. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட 12 தொற்றுக்களும் இருந்தன.

புதிய நோய்த்தொற்றுகளில், 2 விழுக்காடு மட்டுமே வகை 3, 4 மற்றும் 5 தொற்றுக்கள் என்று நூர் ஹிஷாம் கூறினார்.

நாட்டின் கோவிட் -19 தொற்று விகிதம் (R0, அல்லது R-nott) 0.88 ஆக தொடர்ந்தும் இருக்கிறது , புத்ரஜெயா மிக உயர்ந்த அளவு R-nought  1.04 ஐக் கொண்டுள்ளது. அதனைத்தொடர்ந்து நெகிரி செம்பிலான் 1.02 மற்றும் கோலாலம்பூர் 1.01 யையும் கொண்டுள்ளன.

மேலும், வேறு எந்த மாநிலமும் R-nought 1.0க்கு மேல் பதிவு செய்யப்படவில்லை என்றும் நூர் ஹிஷாம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here