பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஒற்றுமை அரசாங்கத்தில் சேருவதற்கான அழைப்பை பாஸ் நிராகரித்துள்ளது. பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுதீன் ஹாசன், “பெரும்பான்மையின் ஆணையை” மதித்து கட்சி முடிவெடுத்ததாகக் கூறினார்.
பல்வேறு கோணங்களில் பெறப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.