சவுதி அரேபிய கால்பந்து வீரர்களுக்கு மன்னர் தந்த வெகுமதி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு! உலக கோப்பையில் அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சவுதி அரேபியா அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற நிலையில், அந்த அணியில் இடம்பெற்ற ஒவ்வொரு வீரருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை பரிசாக வழங்குவதாக சவுதி அரேபியா மன்னர் அறிவித்துள்ளார்.

22ஆவது உலக கோப்பை தொடர் கத்தாரில் கடந்த 20ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவிற்கு இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் அவர்கள் மீதும் அவர்களது அணிகளான அர்ஜெண்டினா மற்றும் போர்ச்சுகல் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் வலுவான அர்ஜென்டினா அணி, முதல்போட்டியில் சவுதி அரேபியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணி சார்பில் பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி மட்டுமே ஒரு கோல் அடித்தார். ஆனால் சவுதி அணி 2 கோல் அடித்து வெற்றி பெற்றது.

தரவரிசைப் பட்டியலில் 51ஆவது இடத்தில் இருக்கும் சவுதி அணிக்கு இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும். அந்த வெற்றியை சவுதி அரேபியா நாடே வெகுவாக கொண்டாடிவருகிறது. இந்த வெற்றியை கொண்டாடுவதற்காக ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த பெருமையை பெற்றுத்தந்த சவுதி கால்பந்து அணி வீரர் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஃபாண்டோம் சொகுசு கார் பரிசளிப்பதாக சவுதி மன்னர் முகமது பின் சலாம் அல் சௌத் அறிவித்துள்ளார்.

மிகப்பெரிய பணக்காரர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், மட்டுமே வாங்க வல்ல சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் காரை தங்கள் நாட்டு கால்பந்து வீரர்களுக்கு பரிசளிப்பதாக சவுதி மன்னர் அறிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here