புதிய அரசாங்கத்தில் BN அமைச்சரவை பதவிகளை கோர முடியாது என்கிறார் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தில் தேசிய முன்னணி எந்த அமைச்சரவை பதவிகளையும் கோர முடியாது என்று மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்  கூறினார்.

இந்த நிலைப்பாடு பிஎன் இன் “No DAP, no Anwar” என்ற நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது என்று மலேசியாகினி தெரிவித்துள்ளது.

டிஏபி வேண்டாம், அன்வார் வேண்டாம், பெர்சத்து வேண்டாம்’ என்ற அம்னோ பொதுச் சபையின் முடிவு இன்னும் அமலில் உள்ளது. அம்னோவின் முடிவை  தேசிய முன்னணி தலைமையும் ஏற்றுக்கொண்டது.

அதனால்தான் தேசிய முன்னணி முன்பு வாக்களிக்கவில்லை மற்றும் அரசாங்கத்தில் சேர வேண்டாம் என்று முடிவு செய்தது. ஆனால்,  மாமன்னரின் ஆலோசனையை ஏற்று பக்காத்தான் ஹராப்பானுடன் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க ஒப்புக்கொண்ட பிறகு அன்வாருக்கு ஆதரவாக தேசிய முன்னணி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.

எனவே, வரவிருக்கும் அமைச்சரவையில் பிஎன் எந்த பதவியையும் கோர முடியாது என்று நான் கருதுகிறேன் என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார். ஒற்றுமை அரசாங்கத்தில் மஇகா எந்த பதவியையும் கோராது என்று சினார் ஹரியான் அறிக்கை குறித்து  விளக்கம் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here