பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது அமைச்சரவையை “கூடிய விரைவில்” வெளியிடுவார். ஆனால் அவர் தலைமையிலான அரசாங்கம் பல கட்சிகளை உள்ளடக்கியதால் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். நான் முடிவெடுப்பதற்கு முன் அனைத்து (அவர்களின்) கருத்துக்களையும் கேட்க வேண்டும். மற்றொரு பிரச்சினை என்னவென்றால், அமைச்சரவை குறைக்கப்படும், என்று அன்வார் கூறியிருப்பதால் மேலும் ஆலோசனைகள் தேவைப்படும்.
பக்காத்தான் ஹராப்பான் தலைவர் பிகேஆரின் தலைமையகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிறப்பு தூதர்கள் அல்லது ஆலோசகர்கள்” போன்ற பதவிகளுக்கு யாரையும் நியமிக்க விரும்பவில்லை என்று கூறினார்.
இதற்கிடையில், நீதிமன்ற வழக்குகள் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சரவையில் நியமிக்கக் கூடாது என்ற கோரிக்கையில், அன்வார் “அனைத்து கருத்துக்களையும் கருத்தில் கொள்வதாக” கூறினார்.
ஆனால் நாம் அனைவரும் அறிந்தபடி, சட்டத்தின் அடிப்படையில், ஒரு தண்டனை வழங்கப்பட்டபோது மட்டுமே (யாராவது குற்றவாளி) எனவும் மீதமுள்ளவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.