செப்பாங்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 103 பேர் இரண்டு வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம்

ஷா ஆலாம், நவம்பர் 30 :

நேற்று மாலை செப்பாங் மாவட்டத்தின் கம்போங் அம்பார் தெனாங் மற்றும் கம்போங் ஸ்ரீ தஞ்சாங் ஆகிய இடங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, மொத்தம் 29 குடும்பங்களைச் சேர்ந்த 103 பேர் அங்கு நேற்றிரவு திறக்கப்பட்ட இரண்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிவாரண மையங்கள் டெங்கிலில் உள்ள டேவான் தாமான் கெமிலாங் மற்றும் டேவான் ஒராங் ராமாய் ஆகிய இரண்டு இடங்களில் செயற்படுவதாக சிலாங்கூர் பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம், மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை என்பன தெரிவித்துள்ளன.

சிலாங்கூரின் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குனர் நோரஸாம் காமிஸ் கூறுகையில் , கம்போங் அம்பார் தெனாங்கில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, கம்போங் அம்பார் தெனாங்கில் இருந்த வெல்ல நீர்க்கடுப்பு உடைந்ததால், நான்கு அடி உயரத்துக்கு க்கு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here