இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில், இருவர் உயிரிழந்தனர்

சிரம்பான், டிசம்பர் 2 :

கம்போங் பெலாங்கான் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள ஜாலான் ரந்தாவ் என்ற இடத்தில், இன்று காலை இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், இருவர் உயிரிழந்தனர் என்று சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நந்தா மரோஃப் தெரிவித்தார்.

காலை 7.50 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 23 மற்றும் 26 வயதுடைய இரண்டு ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், 23 வயதுடைய இளைஞன் ஓட்டிச் சென்ற Yamaha Y15 மோட்டார் சைக்கிள், கோலா சாவாவில் இருந்து சிரம்பான் நோக்கித் தனியாகப் பயணித்தார் என்றும் சம்பவம் நடந்த இடத்திற்கு அவர் வந்தபோது, ​​​​பாதிக்கப்பட்டவர் ஓட்டிய மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் பாதையில் வந்துகொண்டிருந்த 26 வயதுடைய ஒருவர் ஓட்டிச் சென்ற Yamaha Y15 மோட்டார் சைக்கிள் மீது மோதியது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“இந்த மோதலால் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது. அத்தோடு உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சிரம்பான், துவாங்கு ஜாஃபர் (HTJ) மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here