ஜார்ஜ் டவுன்:
பத்து லான்சாங்கில் உள்ள பிளாட் தாமான் ஶ்ரீ டாமாய் என்ற இடத்தில் உள்ள பிரபல நாசி டோமாட்டோ உணவகம் இன்று (ஏப்ரல் 16) தீயில் எரிந்து நாசமானது.
கடையில் ஏற்பட்ட தீ, அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் பரவியதில் அவையும் எரிந்து நாசமானது என்று, ஜாலான் பேராக் தீயணைப்பு நிலையத்தின் தலைவர் அஸெலன் ஹசான் கூறினார்.
“20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த உணவகத்தில் தீப்பிடித்ததாக இன்று காலை 10.37 மணிக்கு தகவல் கிடைத்தது என்றும், உடனே மொத்தம் 14 தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்,” என்றும் அவர் கூறினார்.
மேலும், இவ்விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர் சொன்னார்.