உலகக்கோப்பை கால்பந்து திருவிழா: 2ம் சுற்று இன்று தொடக்கம்

இரண்டாவது சுற்றுக்கு 16 நாடுகள் முன்னேறியுள்ள நிலையில், இதில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும். தோஹா உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20ஆம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும்.

நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா (எச்) ஆகிய 16 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில், இரண்டாவது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இந்த சுற்றில் 16 நாடுகள் விளையாடும். இதில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும். இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 2ஆவது சுற்று ஆட்டங்களில் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்த நெதர்லாந்து, பி பிரிவில் 2ஆவது இடத்தை பிடித்த அமெரிக்கா இரவு 8.30 மணிக்கு மோதுகின்றன.

இதேபோல், சி பிரிவில் முதல் இடத்தை பிடித்த அர்ஜென்டினா, டி பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா நள்ளிரவு 12.30 மணிக்கு மோதுகின்றன. ஈக்வடார், கத்தார், ஈரான், வேல்ஸ், மெக்சிகோ, சவுதி அரேபியா, துனிசியா, டென்மார்க், ஜெர்மனி, கோஸ்டாரிகா, பெல்ஜியம், கனடா, கேமரூன், செர்பியா, உருகுவே, கானா ஆகிய நாடுகள் வெளியேறின என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here