கோலாலம்பூர், டிசம்பர் 8 :
அடுத்த ஆண்டு மூன்றாம் காலாண்டில், பரபரப்பான நேரங்களில் பயண எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், கிளானா ஜெயா வழித்தடத்தில் மொத்தம் 56 பெட்டிகள் கொண்ட இலகு ரயில் போக்குவரத்து (LRT) ரயில்களின் சேவை படிப்படியாக செயல்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
தற்சமயம், பரபரப்பான நேரங்களில் 5 நிமிட இடைவெளிகளில் 38 பெட்டிகள் கொண்ட ரயில்கள் மட்டுமே இயங்குகின்றன, மேலும் 18 ரயில் பெட்டிகளில் பல வகையான பராமரிப்பு செயல்முறைகளை மேற்கொள்ளப்படுவதால் அவை சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை.
“மூன்று நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் இலக்கை அடைவதற்கு, 48 ரயில் பெட்டிகள் இயக்க வேண்டும். பராமரிப்புப் பணியை விரைவுபடுத்துமாறு பிராசரானாவைக் கேட்டுள்ளேன்.
அதே நேரத்தில், 19 புதிய ரயில் பெட்டிகளையும் பிராசரானா வாங்கியுள்ளதாகவும், சிறந்த மற்றும் வசதியான சேவைகளை உறுதி செய்வதற்காக, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அவை செயல்படத் தொடங்குவதாகவும் லோக் கூறினார்.