பெரிகாத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மக்களவையில் மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் தங்கள் பங்கை ஒருங்கிணைந்து செயல்படுத்தும் என்று பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை (டிச. 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரிகாத்தானின் உச்ச மன்ற (குழு) நியமனத்திற்கு ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளது.
பெரிகாத்தான் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினை பெரிகாத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களிப் தலைவராகவும், பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கை துணைத் தலைவராகவும் குழு நியமித்தது.
ஹம்சா எதிர்க்கட்சித் தலைவராகவும், கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹாசன் பெரிகாத்தான் தலைமைக் கொறடாவாகவும் (whip), புதிதாக நியமிக்கப்பட்ட சபா பெர்சத்து தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ரொனால்ட் கியாண்டி துணைக் கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.