கூலிம், லூனாஸ் பகுதியில் உள்ள தாமான் பாயாம் இண்டா என்ற இடத்தில் நேற்றிரவு எரிந்த கொள்கலனுக்குள் இருவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்புப் பகுதியில் பாதுகாப்புக் குடிலாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கொள்கலனுக்குள் இருந்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தீ விபத்து குறித்து தங்களுக்கு இரவு 10.56 மணிக்கு அழைப்பு வந்தது. “தீயை அணைக்கும் போது, அங்கிருந்த கொள்கலனுக்குள் இரண்டு பேர் இறந்து கிடந்ததை தீயணைப்பு வீரர்கள் கண்டறிந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் கொள்கலனுக்குள் இருந்து தீ ஏற்பட்டது என்று கண்டறியப்பட்டது, வழக்கு மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
இதுவரை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருவதாகவும், சம்பவத்திற்கான காரணத்தை அடையாளம் காண பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறியப்படுகிறது.