கிளாந்தானில் மண்சரிவு மற்றும் நீர் எழுச்சி ஆபத்து ஏற்படும் அபாயத்திலுள்ள அனைத்து சுற்றுலா இடங்களும் தற்காலிகமாக மூடப்படுகிறது

மண்சரிவு மற்றும் அதிக அபாயத்தில் உள்ள நீர்நிலைகள் என கிளாந்தானில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களும் இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுகின்றன என்று மாநில உள்ளாட்சி, வீட்டு வசதி மற்றும் சுகாதாரக் குழுவின் தலைவர், டத்தோ டாக்டர் இசானி ஹுசின் தெரிவித்தார்.

பத்தாங் காலியில் நிகழ்ந்த சோகத்தைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“பேரிடர் அபாயம் ஏற்படும் என நம்பப்படும் கிளாந்தானின் அனைத்து இடங்களும், குறிப்பாக ஜெலி மற்றும் கோலக் கிராயில் உள்ள இடங்கள், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்,” என்று அவர் இன்று கூறினார்.

முன்னதாக, தபோங் மாவட்ட கவுன்சில் தலைவர், முகமட் ஹரிஃப் கசாலி, தபோங்கில் உள்ள பல பொழுதுபோக்கு இடங்கள் இன்று உடனடியாக மூடப்படும் என்று அறிவித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

மூடப்பட்ட இடங்களாக கோலா ல்கான் வளாகம், லாதா கெர்தாஸ், சுங்கை கெனெரோங், பைப் ரிசார்ட் ஜெலாவாங் மற்றும் வியூ பாயிண்ட் ஜெலாவாங் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.

இந்த மூடல் அறிவிப்பு உள்ளாட்சித் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களின் பேரிலேயே அமல்படுத்தப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here