“நான் எப்போதும் அம்னோவில் இருப்பேன்” என்கிறார் ஹிஷாமுடின்

“நான் அம்னோவில் என்றென்றும் இருப்பேன்” என்று டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

“நான் எப்போதும் அம்னோவுடன் இருக்கிறேன்… கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் நான் அம்னோவுடன் இருப்பேன். நான் எங்கும் செல்லவில்லை,” என்று செம்ப்ராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறினார்.

தேசிய முன்னணியின் பொருளாளராக தனது அரசியல் பயணம் மிகக் கடினமானது என்றும், முன்னோக்கி செல்லும் பாதையும் எளிதாக இருக்காது என்றும் அவர் கூறினார்.

“15வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி படுதோல்வி அடைந்தது. அது 30 இடங்களை மட்டுமே வென்றது,” என்று அவர் கூறினார், இந்த தோல்வி குறிப்பாக அம்னோ மற்றும் தேசிய முன்னணியில் உள்ளவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விரைவாக கட்சியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

“மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டுமானால் நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. நாங்கள் இனி ஒரு தவறான நடவடிக்கையை ஏற்க முடியாது, ”என்று அவர் மேலும் கூறினார்.

தாம் முன்பு போல் பரபரப்பாக இல்லாததால், கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் நேரத்தை செலவிடுவேன் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here