105 கிலோ கெத்தும் இலைகள் வைத்திருந்த மூவர் கைது

பாயான் லெப்பாஸில் உள்ள ஜாலான் பெர்மாடாங் டாமார் லாவூட்டில் உள்ள ஒரு வீட்டில் நேற்று சோதனை நடத்தியதில் 105 கிலோகிராம் இலைகள் வைத்திருந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

அந்தக் கும்பல் கெத்தும் இலைகளை பதப்படுத்தி, கெத்தும் நீரை விற்பனை செய்வதில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து 1,545 லிட்டர் கெத்தும் நீர், அதன் தயாரிப்பு செயல்முறைக்கு பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் சமையல் எரிவாயுக் கலனையும் போலீசார் பறிமுதல் செய்தனர் என்று
பாராட் தயா மாவட்ட காவல்துறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதில் 22 முதல் 26 வயதுடைய வேலையற்ற மூன்று சந்தேக நபர்களும், விஷச் சட்டம் 1952 இன் பிரிவு 30(3) இன் கீழ் விசாரணைக்காக நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here