தானா மேரா:
கொள்ளை மற்றும் பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்டது தொடர்பான குற்றச்சாட்டில் இந்த மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தை சேர்ந்த நான்கு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ,
கிளாந்தான் காவல்துறைத் தலைவர், டத்தோ முகமட் ஜாக்கி ஹருன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த புதன்கிழமை காலையில் , தனது வீட்டிற்குள் நுழைந்த மூன்று ஆண்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் புதனன்று இரவு காவல்துறையில் புகாரளித்தார்.
அதனடிப்படையில், உடனடியாக கான்ஸ்டபிள் மற்றும் கார்ப்ரல் தரத்தில் உள்ள நான்கு போலீஸ் உறுப்பினர்களைக் கைது செய்ததாக அவர் மேலும் கூறினார்.
“சந்தேக நபர்கள் அனைவரும் 22 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர்கள் போதைப்பொருளை எதிர்மறையாக இருப்பது கண்டறியப்பட்டது என்றும் தண்டனைச் சட்டத்தின் (KK) பிரிவு 395/354 இன் படி, விசாரணைக்கு உதவும்பொருட்டு அந்நால்வரும் தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கு நீதிமன்றத்திடம் விண்ணப்பம் செய்யப்படும்” என்று அவர் கூறினார்.