பூட்டிய காரில் சிக்கிக் கொண்ட சிறுவன் பாதுகாப்பாக மீட்பு

பூட்டிய காரில் சிக்கிக் கொண்ட சிறுவன் பாதுகாப்பாக மீட்பு

தாமான் உடா, ஜாலான் சுல்தானாவில் பூட்டிய பெரோடுவா அல்சா காரில் சிக்கிக் கொண்ட ஆறு வயது சிறுவன், இன்று தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக, அலோர் ஸ்டார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர், துணை தீயணைப்பு கண்காணிப்பாளர் அஹ்மட் நௌஃபல் அப்துல்லா தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 6.08 மணிக்கு தமது துறைக்கு அழைப்பு வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து மூத்த தீயணைப்பு அதிகாரி II அஹ்மட் நோஸ்லான் ஜகாரியா தலைமையிலான உறுப்பினர்கள் குழு, சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த இடத்தை சென்றடைந்ததாகவும் அவர் கூறினார்.

“இடத்திற்கு வந்து பார்த்தபோது, ​​சிறுவன் பூட்டப்பட்டிருந்த காரில் தூங்கிக் கொண்டிருந்தான். மீட்பு பிரிவினர் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, காரின் கதவைத் திறந்து பாதிக்கப்பட்டவரை வெற்றிகரமாக மீட்டு, பாதிக்கப்பட்டவரை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here