சபாவிற்குள் நுழையும் அனைத்துலக சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவுக்கு முந்தைய கோவிட் சோதனை மற்றும் தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை

சபாவிற்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இனி நுழைவுக்கு முந்தைய கோவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள தேவையில்லை மற்றும் தடுப்பூசி சான்றிதழை வழங்க வேண்டியதில்லை என்று மாநில துணை முதல்வர் II டத்தோஸ்ரீ டாக்டர் ஜோச்சிம் குன்சலம் தெரிவித்தார்.

சபா மாநிலத்திற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நுழைவதற்கான நடைமுறையை கூட்டரசு மட்டத்தின் நிலையான கொள்கைகளுக்கு ஏற்ப, முழுமையாக தரப்படுத்த விதிமுறைகளை அமல்படுத்த சபா அமைச்சரவை நேற்று முடிவெடுத்துள்ளதாக, அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னதாக, ஜனவரி 8 முதல் சீனாவில் இருந்து மாநிலத்திற்குள் நுழையும் பயணிகள் எதிர்மறையான கோவிட்-19 சோதனையைச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் முழுமையான தடுப்பூசிகளின் ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று மாநில அரசு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here