Puteri துறைமுகத்திலிருந்து சிங்கப்பூருக்கு புதிய படகு சேவை ஆரம்பிப்பது தொடர்பில் ஜோகூர் ஆய்வு செய்கிறது

இங்குள்ள Puteri துறைமுக அனைத்துலக துறைமுகத்திலிருந்து சிங்கப்பூருக்கு புதிய படகு சேவையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஜோகூர் அரசாங்கம் ஆய்வு செய்யவதாக, மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி தெரிவித்தார்.

இவ்வாறு ஒரு புதிய போக்குவரத்து ஆரம்பிக்கப்படின், இது ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் இடையேயான பயணத்தை எளிதாக்கும், மேலும் இது மாநிலத்தின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்த உதவும் என்று நம்புகிறோம் என்றும் கூறினார்.

“இந்த திட்டம் தொடர்பில் பயணம் செய்வதற்கான வழிகளை ஆய்வு செய்து பார்க்கும்படி சுற்றுலா, சுற்றுச்சூழல், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரக் குழுவின் தலைவர் ராவன் குமார் கிருஷ்ணசாமியிடம் கேட்டுக் கொண்டேன்” என்று அவர் இன்று பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here