முட்டைகளை ஏற்றிவந்த லோரி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் லேசான காயமடைந்தார்

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 242.6 ஆவது கிலோமீட்டரில் கோழி முட்டைகளை ஏற்றிச் சென்ற லோரி இன்று விபத்துக்குள்ளானதில், முட்டைகள் சிதறி நெடுஞ்சாலையில் உடைந்து கிடந்தன.

இந்த விபத்தினால் வடக்கில் ஐந்து கிலோமீற்றர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் இது இரண்டு மணி நேரங்கள் தொடர்ந்ததாகவும் ரெம்பாவ் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணைக் கண்காணிப்பாளர் ஹஸ்ரி முகமட் கூறினார்.

இன்று காலை 9.11 மணியளவில் கிடைத்த தகவலின் அடிப்படையில், இடதுபுறப் பாதையில் சென்ற குறித்த லோரி கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறம் உள்ள சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதனால் லோரி ஓட்டுநர், 30 சிறு காயங்களுக்கு உள்ளானார், மேலும் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here