காப்பிக் கடையில் துப்பாக்கிச் சூடு; மூவர் காயம்

கூச்சிங்:

ணவு விநியோகம் செய்பவர்கள் போல் மாறுவேடமிட்டு மோட்டார் சைக்கிளில் நடத்திய வந்த 2 பேர் துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்தனர்

இந்த சம்பவம் சிபுவிலுள்ள ஜாலான் வோங் கிங் ஹவு, லோரோங் 3 இல் உள்ள ஒரு காபி கடையில் நேற்று மாலை 5 மணியளவில் நடந்ததாக சிபு மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் சுல்கிப்லி சுஹைலி கூறினார்.

இதுகுறித்து மாலை 5.41 மணியளவில் பொதுமக்களிடமிருந்து போலீசாருக்கு தகவல் வந்தது என்றும்,உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேர் சுடப்பட்டதை கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.

சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகளின் தகவலின் அடிப்படையில், இரண்டு தாக்குதல்காரர்கள் இரண்டு தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் வந்தனர் என்றும், குறித்த இருவரது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரும் 27 முதல் 33 வயதுடைய சீனர்கள் என்றும், தற்போது அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

கொலை முயற்சிக்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 307 இன் கீழ் வழக்கு இப்போது விசாரிக்கப்பட்டு வருவகிறது என்றும் அவர் கூறினார்.

சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை காவல்துறை இன்னும் அடையாளம் காணவில்லை என்றும், அது தொடர்பில் தமது தரப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளது என்றும் சுல்கிப்லி கூறினார்.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் யாரும் ஊகங்களை வெளியிட வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், வழக்குத் தொடர்பான விசாரணையில் உதவ, வழக்கின் விசாரணை அதிகாரி, துணை கண்காணிப்பாளர் மிங்கட் பாக்கிலை 019-8867978 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here