புதுதில்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசிய இரட்டையர்களான ஆரோன் சியா மற்றும் சோ வூய் யிக் ஜோடி 21-11, 15-21, 21-16 என்ற செட் கணக்கில் உலகின் முதல் நிலை ஜோடியான ஃபஜர் அல்ஃபியன் மற்றும் முஹம்மது ரியான் அட்ரியாண்டோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
அனைத்துலக தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும் இருவரும், அரையிறுதியின் முதல் ஆட்டத்தை எளிதாக வென்றனர். ஆனால் இரண்டாவது ஆட்டத்தில் தோல்வியடைந்தனர். மூன்றாவது ஆட்டத்தில் அவர்கள் வலுவாக திரும்பினர்.