நேற்று காலை சபாவின் நுனுயான் தீவுக்கருகில் அருகே ரோந்துப் படகு கவிழ்ந்ததில், கூட்டுப் பணிப் படை தலைமையகம் 2 (ATB 2) ஐச் சேர்ந்த 7 இராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
காலை 11 மணியளவில் அவர்களின் ரோந்து படகு பெரிய அலைகளால் தாக்கப்பட்டதில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சபா போலீஸ் கமிஷனர், டத்தோ இட்ரிஸ் அப்துல்லா கூறினார்.
“நேற்றுக் காலை 10 மணியளவில், ATB 2’s Viper 7 என்ற ரோந்துப் படகு, ஏழு இராணுவ வீரர்களுடன் Batu Sapi, Sandakan இல் உள்ள Bakungan Kecil தீவின் ATB 2 தலைமையக படகுத்துறையில் எரிபொருளை நிரப்பி விட்டு, ரோந்துப்பணிக்கு சென்றது.
“இருப்பினும், சுமார் 11 மணியளவில், ரோந்துப் படகு நுனுயான் தீவுக்கருகிலுள்ள கடல் அருகே வந்தபோது, அது பெரிய அலைகளால் தாக்கப்பட்டு (ரோந்து படகு) கவிழ்ந்தது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.