ஜோகூரில் 5,455 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று காலை 8 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,508 குடும்பங்களைச் சேர்ந்த 5,455 பேர், ஜோகூரின் ஏழு மாவட்டங்களில் உள்ள 55 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இது நேற்றிரவு 10 மணியளவில் 1,390 குடும்பங்களைச் சேர்ந்த 5,000 பேர் மட்டுமே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோகூரின் ஏழு மாவட்டங்களில் மிக மோசமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சிகாமாட் உள்ளது. அங்கு இன்று காலை நிலவரப்படி, 21 பிபிஎஸ்ஸில் 504 குடும்பங்களைச் சேர்ந்த 1,801 குடியிருப்பாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில அரசு செயலாளர், டான் ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி தெரிவித்தார்.

கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஜோகூரின் 10 மாவட்டங்களில் ஏழு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ​​மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான அஸ்மி மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here