சபாவின் சில மாவட்டங்களில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது, இன்று பிற்பகல் 4 நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 927 குடும்பங்களைச் சேர்ந்த 2,639 பேர் அங்குள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் இன்று நண்பகல் நிவாரண மையங்களில் தங்கியிருந்த 3,564 குடும்பங்களைச் சேர்ந்த 10,326 பேருடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை சடுதியான குறைவைக் காட்டுவதாக சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும் இதுவரை 13 தற்காலிக துயர் துடைப்பு மையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், இன்னும் 19 இடங்களில் இந்த துயர் துடைப்பு மையங்கள் இயங்கி வருகின்றன என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.